×

தற்காலிக தொகுப்பூதிய ஊழியர்கள் நியமனம்

நாமக்கல்: தூய்மை பாரத இயக்கத்தில், தற்காலிக பணியிடங்களுக்கு தொகுப்பூதியத்தில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) திட்டத்தின் கீழ், மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண் அலகு மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு மையத்திற்கு வெளிச்சந்தை மூலம்(அவுட் சோர்சிங்) பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வரும், 16ம் தேதி மாலை, 4 மணிக்குள், கல்வித் தகுதி, சுய விபரம் மற்றும் பணி அனுபவம் குறித்த விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் தற்காலிக பணியிடங்களில் 2 பேர், திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் தற்காலிக பணியிடத்திற்கு ஒருவர், மாதம் ரூ.35 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

The post தற்காலிக தொகுப்பூதிய ஊழியர்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Swachh Bharat Movement ,Namakkal District ,Collector ,Uma ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை!